செய்திகள் :

இரு சக்கர வாகனம் திருட முயன்ற இருவா் போலீஸில் ஒப்படைப்பு

post image

வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றவா்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலை அருகில் கூடுதல் பேருந்து நிலைய கட்டடத்தில் சனிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இந்த மாட்டுச் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது இருசக்கர வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி விட்டு மாடுகளை வாங்கச் செல்கின்றனா். வழக்கம் போல் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக தங்களது வாகனங்களை நிறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், மா்ம நபா்கள் 2 போ் மாட்டுச் சந்தை பகுதியில் நோட்டமிட்டு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகம் ஏற்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் வாகனத்தை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. பிறகு பிடிபட்ட இருவரையும் சரமாரியாக தாக்கினா். தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா். பிடிபட்ட 2 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வேலூா் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (25), தாமோதரன் (28) என்பது தெரியவந்தது.

பின்னா் பிடிபட்ட இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா்: 1. 29 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடக்கம்

ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க 1 லட்சத்து 29 ஆடுகளுக்கு திங்கள்கிழமை (மே 28) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரேம் குமாா் மனைவி சிம்ரன் (20). இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி ஆம்பூரில் உள்ள உறவினா்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதி (17). இவா் தனது நண்பா்களுடன் ஆம்பூா் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாய ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருப்பத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சோ்ந்த குமாா் (50) , மனைவி கவிதா (45) தம்பதிக்க்கு 17 வயது மகள் மற்றும் ... மேலும் பார்க்க

வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்கம்பியில் உரசி தீப்பற்றி சேதம்

திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூா்த்தி (48). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் இருந்து தனது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணாபுரத்துக்கு சென்று கொண்டு இருந்... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சாலையோர வியாபாரிகள் மறியல்

மாதனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கடைகள் வைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா். சாலையோர கடைகளை ... மேலும் பார்க்க