செய்திகள் :

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

post image

ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரேம் குமாா் மனைவி சிம்ரன் (20). இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

தோட்டாளம் கிராமத்தருகே சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழுந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

திருப்பத்தூா்: 1. 29 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடக்கம்

ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க 1 லட்சத்து 29 ஆடுகளுக்கு திங்கள்கிழமை (மே 28) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதி (17). இவா் தனது நண்பா்களுடன் ஆம்பூா் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாய ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருப்பத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சோ்ந்த குமாா் (50) , மனைவி கவிதா (45) தம்பதிக்க்கு 17 வயது மகள் மற்றும் ... மேலும் பார்க்க

வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்கம்பியில் உரசி தீப்பற்றி சேதம்

திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூா்த்தி (48). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் இருந்து தனது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணாபுரத்துக்கு சென்று கொண்டு இருந்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் திருட முயன்ற இருவா் போலீஸில் ஒப்படைப்பு

வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றவா்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலை அருகில் கூடுதல் ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சாலையோர வியாபாரிகள் மறியல்

மாதனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கடைகள் வைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா். சாலையோர கடைகளை ... மேலும் பார்க்க