செய்திகள் :

சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

post image

சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மும்பை புறப்பட்டது. அப்போது ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.

இதனால் குலுங்கியபடி ஓடிய விமானத்தை சாமர்த்தியமாக இயக்கி அதன் விமானி நிறுத்தினார்.

பின்னர் சேதமடைந்த டயரை மாற்றுவதற்கு விமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்; 7 பேர் பலி

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, டயர் மாற்றப்பட்டு விமானம் 2 மணி நேரம் தாமதமாக மீண்டும் மும்பை புறப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது அனைத்து பயணிகளும் விமானத்திலேயே இருந்தனர்.

இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு: ஒன்றரை மணி நேரம் தாமதம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இரவு 9 ம... மேலும் பார்க்க

பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டாா். தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்கள் முன்னேறும் வகையில் அனைத்து மக்களின் மக்க... மேலும் பார்க்க

121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் சனிக்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

நாளை காவல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது. பேரவை அன்றைய தினம் காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும். இதில், சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி ... மேலும் பார்க்க

காட்பாடி வழியாக பெங்களூரு - கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில்!

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

கோயில் குடியிருப்பு வாடகை உயா்வை குறைக்க விரைவில் அரசாணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கான வாடகை உயா்வை குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க