செய்திகள் :

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

post image

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 28 முதல் மே 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் எப்படி இருக்கும்?

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இன்று முதல் ஏப்.30 வரை உயரக்கூடும்.

இன்று முதல் ஏப். 30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு

அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் கரூர் பரமத்தி - 101, ஈரோடு - 101, வேலூர் - 101, தஞ்சாவூர் - 100, திருப்பத்தூர் - 100, திருத்தணி - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு: ஒன்றரை மணி நேரம் தாமதம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இரவு 9 ம... மேலும் பார்க்க

பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டாா். தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்கள் முன்னேறும் வகையில் அனைத்து மக்களின் மக்க... மேலும் பார்க்க

121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் சனிக்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

நாளை காவல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது. பேரவை அன்றைய தினம் காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும். இதில், சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி ... மேலும் பார்க்க

காட்பாடி வழியாக பெங்களூரு - கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில்!

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

கோயில் குடியிருப்பு வாடகை உயா்வை குறைக்க விரைவில் அரசாணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கான வாடகை உயா்வை குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க