செய்திகள் :

என்ன, ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா?

post image

வங்கிகளில் கணக்குத் தொடங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்தே ஆக வேண்டும் என்ற விதிமுறை வந்துவிட்டது.

ஆனால், சில வங்கிகள் ஸீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க வாய்ப்புகளை வழங்குகின்றன. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை வங்கிக் கணக்கை ஒருவர் ஆன்லைன் மூலமாகவே தொடங்கலாம்.

இதுபோன்ற வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டியதில்லை. இதனால் ஏற்ற இறக்கமான வருமானம் உள்ளவர்கள் பயன்பெறலாம்.

அதுபோன்ற பல வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன.. அவை..

குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.10 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம், ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் தொகை குறைந்துவிட்டால் அதற்காக வங்கிக் கணக்கிலிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படும். இது உங்கள் சேமிப்புப் பணத்தைக் குறைத்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க வழிவகுத்துவிடும்.

ஆனால், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு என்றால் இந்த ஆபத்து இல்லை.

கேஒய்சி விண்ணப்பம்

பொதுவாக வங்கிக்கு நேரில் சென்ற கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். இதில், விடியோ மூலமாகவே கேஒய்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பு உள்ளது.

அடிப்படை சேவை மட்டும்

சில வங்கிகள், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளுக்கு பல விதிகளிலிருந்து விலக்கு அளித்து வருகிறது. அதில் கேஒய்சியும் ஒன்று. அதன்படி, குறைந்தபட்ச வங்கிச் சேவை மட்டுமே இதில் பெறலாம். மூத்தக் குடிமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வட்டியும் கிடைக்கும்

ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளிலும், நீங்கள் சேமிக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. எனவே, வெறும் சேமிப்பு மட்டுமல்லாமல் வருமானமும் கிடைக்கிறது.

இன்டர்நெட் பேங்கிங்

ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குக்கும் இன்டர்நெட் பேங்கிக் வசதி வழங்கப்படுவதால் உங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

துவக்க வங்கிக் கணக்கு

முதன் முதலாக வங்கியில் கணக்குத் தொடங்குவோர், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கைத் தொடங்கினால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். வங்கிச் சேவைகளையும் கற்றுக்கொள்ள முடியும்.

யாருக்கெல்லாம் பயனளிக்காது?

நன்மை இருக்கும் அதே வேளையில், சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக, சில ஸீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் வரம்பு நிர்ணயிக்கப்படலாம்

வெறும் இன்டர்நெட் பேங்கிங் வசதி கொண்ட ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு, வங்கியின் இணையதள பராமரிப்பு நாள்களில் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளின் வேறு சில வரம்புகளும் வரையறுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதாம்.

ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் வைப்பு செலுத்தலாம், இவ்வளவு தொகைதான் செலுத்தலாம் என்ற சில வரம்புகள் இருக்கலாம். இது சில வேளைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

இதுபோல ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. பயனாளர் விருப்பப்படி இதனைத் தேர்வு செய்யலாம்.

சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம்... பாகிஸ்தானை எதிர்க்கும் ஆயுதமாவது எப்படி?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மூன்று போர்களின்போதுகூட, மனிதாபிமான அடிப்படையில் நிறுத்தப்படாத சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.எல்... மேலும் பார்க்க

பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

பஹல்காமில் தாக்குதல் நடத்தியது யார்? பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு இடையே, பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்கப் போவது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.ஜம... மேலும் பார்க்க

உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது த... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸின் இளமைக்கால காதல்!

உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் செல்வேன் என போப் பிரான்சிஸ் தனது காதலிக்காக இளமைக் காலத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காதல், நிராகரிப்பில் முடிந்ததாலோ என்னவோ? கடிதத்தில் அவர் எ... மேலும் பார்க்க

ஒரு நாளைக்கு தனிநபர் செலுத்தும் ஜிஎஸ்டி எவ்வளவு?

ஜிஎஸ்டி அறிமுகமானபோது, இந்த எழுத்துகளை உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தும்போதுதான் மக்கள் பார்த்திருப்பார்கள். சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி என மத்திய அரசுக்கு ஒரு வரியும் மாநிலத்துக்கு ஒரு வரியும் ப... மேலும் பார்க்க

வரலாற்றில் மிக மோசமான மோசடி.. போலி விமான நிலைய விற்பனை!

போலி அழைப்பு, மின்னஞ்சல் என தற்போது வகைக்கு ஒரு மோசடிகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், 1990ஆம் ஆண்டில் நடந்த, வரலாற்றிலேயே இப்படியொரு மோசடி நடந்திருக்காது என்று சொல்லும்... மேலும் பார்க்க