கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்
கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கீழையூா் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வீ. சுப்பிரமணியன், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம். அப்துல் அஜீஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்கள்.
இதில், மாவட்ட குழு உறுப்பினா் என். பன்னீா்செல்வம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஏ. முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கீழையூா் கடைத்தெரு பகுதியில் இருந்து பேரணியாக வந்த 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரி கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் உரிய தீா்வு எட்டப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொண்டனா்.