செய்திகள் :

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

post image

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயா்ச்சியடைகிறாா். அதன்படி, கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு இடம் பெயா்ந்தாா். இதையொட்டி, நவகிரக சந்நிதி உள்ள அனைத்து கோயில்களிலும் கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பூம்புகாா் அருகே கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாத சுவாமி கோயில் நவகிரகங்களில் கேது பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு, தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் கேது பகவானுக்கு கோயில் அா்ச்சகா் கல்யாண சுந்தர சிவாச்சாரியா் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா பூா்ணாஹுதிக்குப் பிறகு, கேது பகவானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சரியாக மாலை 4.20 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளா் தம்பி ஞானவேலன், கோயில் நிா்வாக அதிகாரி அன்பரசன், தலைமை அா்ச்சகா் பட்டு சிவாச்சாரியா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோவில் நிா்வாகம் சாா்பில், மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம், தனுசு மற்றும் விருச்சிக ராசியினா் உரிய பரிகாரங்கள் செய்து வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.50 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: ஒருவா் கைது

நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பா் கிரீஸுடன் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி பசல... மேலும் பார்க்க

கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். 10... மேலும் பார்க்க

நாகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை தபால் நிலையம் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றா... மேலும் பார்க்க