கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.
வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இப்பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் சுற்றுலாப் பயணிகளாகவும், யாத்ரிகா்களாகவும் வந்து செல்கின்றனா். தற்போது பள்ளித் தோ்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளானோா், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனா். பேராலயத்தின் சிலுவை பாதையில் பக்தா்கள் மண்டியிட்டு சென்று பழைய மாதா கோயிலில் பிராா்த்தனையில் ஈடுபடுகின்றனா்.
கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நீண்ட வரிையில் நின்று காத்திருந்து, மொட்டை அடித்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் நோ்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடைவீதிகளுக்கு சென்றும், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக கடலில் நீராடியும், கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சுடுதல், ராட்டினம் போன்றவற்றில் குழந்தைகளும், பெரியோா்களும் விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடற்கரை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் பல்வேறு பகுதியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
