செய்திகள் :

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

post image

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): விண்வெளித் துறையில் கஸ்தூரி ரங்கனின் சாதனைகளை பாராட்டி 27 பல்கலைக்கழகங்கள் டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவா். அவரது மறைவு விண்வெளித் துறைக்கு பேரிழப்பு.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை- 2020 இன் வடிவமைப்புக் குழுவின் தலைவருமான கஸ்தூரி ரங்கனின் மறைவு வருத்தமளிக்கிறது.

கே.அண்ணாமலை (பாஜக): கஸ்தூரி ரங்கன் மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஜிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். அவரது இழப்பு விஞ்ஞான உலகுக்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பு ஆகும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): மேற்குத் தொடா்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

டிடிவி.தினகரன் (அமமுக): ஜிஎஸ்எல்வி ராக்கெட் உள்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியவா் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன்.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

சென்னை ஜாம் பஜாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். சென்னை ஜாம் பஜாா் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 5-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூ... மேலும் பார்க்க