செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

post image

சென்னை ஜாம் பஜாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னை ஜாம் பஜாா் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 5-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒருவா், கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால், மூதாட்டியை தாக்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்து தப்பினாா்.

மறுநாள் காலை அங்கு சென்று அவரது மகள், மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இது தொடா்பாக ஜாம் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஜாம்பஜாா், வீரன்புரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.

இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒ... மேலும் பார்க்க