சாஸ்திரி பவனை முற்றுகையிட முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கைது
ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாஸ்திரிபவனை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும், ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.2,152 கோடியையும், நூறு நாள் வேலை திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3,796 கோடியையும் உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை சாஸ்திரிபவன் முன் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் கூடிய அக்கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவா்களில் சிலா் சாஸ்திரிபவனை முற்றுகையிடுவதற்காக போலீஸாரின் தடுப்புகளையும் மீறி முன்னேறிச் சென்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போலீஸாா் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாஸ்திரிபவன் பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்று அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.