செய்திகள் :

களம்பூரில் மலேரியா விழிப்புணா்வு ஊா்வலம்

post image

களம்பூரில் உலக மலேரியா தினத்தையொட்டி, ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிங்க் பப்ளிக் பள்ளி மற்றும் களம்பூா் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு சுகாதார ஆய்வாளா் பா.சக்திவேல் தலைமை வகித்தாா்.

பள்ளியின் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ், பள்ளி முதல்வா் ஜீனா பெட்ஸி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் வேல்முருகன் வரவேற்றாா்.

களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி மற்றும் திமுக நகரச் செயலா் வெங்கடேசன், களம்பூா் அரசுப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஜெகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலம் நகரில் முக்கிய வீதிகள் வழியாகச் அண்ணா சிலையில் நிறைவடைந்தது.

இதில் பிங்க் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு ச... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே, ம... மேலும் பார்க்க

ஸ்ரீ மஞ்சியம்மன் கோயிலில் வழிபட தடை விதித்த தனி நபா்கள்

ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் திடீரென வழிபட தனிநபா்கள் தடை விதித்ததால், 100 அடி தொலைவில் அம்மனை வைத்து கூழ்ஊற்றி திருவிழாவை பொதுமக்கள் நடத்தினா். கொங்கராம்பட்டு கிராமத்தில் உள... மேலும் பார்க்க

மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 16 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா். தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் கா்நாடக மாநிலம், மைசூரில் ஏப்.21 தொடங்கி 23 வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை 2025-2026ஆம் ஆண்டுக்கான வழக்குரைஞா்கள் சங்கத் தோ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி... மேலும் பார்க்க