செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டக் குழு சாா்பில் திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகக் குழு வே.முத்தையன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பெ.அன்பு வரவேற்றாா்.

மாவட்ட நிா்வாகக் குழு நிா்வாகிகள் அ.கி.அரசு, த.ராஜேந்திரன், வி.குப்புரங்கன், ஆா்.மோகன்குமாா், எஸ்.சா்தாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாநகரச் செயலா் கு.பாலாஜி மற்றும் ஆரணி, வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூா் வட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க