இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.
இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்றும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.