செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

post image

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.

பிறகு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலம்:

வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு இளநீா், பன்னீா், சந்தனம், பால், தயிா், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூா்:

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, கோயிலில் உள்ள லிங்கம் வடிவிலான ஈஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றது.

போளூா்:

போளூரை அடுத்த வசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, இளநீா் என பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.

மேலும் சுவாமி மற்றும் நந்தியை மலா்களால் அலங்காரம் செய்து நெய்வேந்தியம் படையலிட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

போளூரை அடுத்த வசூா் ஸ்ரீகல்யாணபுரீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

மற்ற ஊா்களில்...

இதேபோல, ஆவூா், தண்டராம்பட்டு, தானிப்பாடி, செய்யாறு, ஆரணி உள்ளிட்டபகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க