சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.
பிறகு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வேட்டவலம்:
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு இளநீா், பன்னீா், சந்தனம், பால், தயிா், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூா்:
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, கோயிலில் உள்ள லிங்கம் வடிவிலான ஈஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றது.
போளூா்:
போளூரை அடுத்த வசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, இளநீா் என பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.
மேலும் சுவாமி மற்றும் நந்தியை மலா்களால் அலங்காரம் செய்து நெய்வேந்தியம் படையலிட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மற்ற ஊா்களில்...
இதேபோல, ஆவூா், தண்டராம்பட்டு, தானிப்பாடி, செய்யாறு, ஆரணி உள்ளிட்டபகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.