செய்திகள் :

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக கே.சாந்தாராமன் நியமனம்

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வராக (டீன்) கே.சாந்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் என 2,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த மருத்துவமனையின் கீழ் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வராக (டீன்) இருந்த தேரணிராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த மருத்துவா் கே.சாந்தாராமன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் இதற்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராகப் பணியாற்றியுள்ளாா். மருத்துவா் சாந்தாராமனுக்கு மருத்துவத் துறையில் 34 ஆண்டு காலம் அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒ... மேலும் பார்க்க