செய்திகள் :

விவசாயிகளுக்கு சிக்கன வேளாண்மை விழிப்புணா்வு

post image

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் சிக்கன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த முகாமின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை தூளி கிராமத்தில் முகாமிட்டு, சிக்கன வேளாண்மை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பங்களான 3 ஜி கரைசல், மஞ்சள் மற்றும் நீல ஒட்டும் பொறி, காட்டுப் பன்றி விரட்டுதல், 5 இலை கரைசல் குறித்து தெரிவித்தும், தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி பேராசிரியா் டி.வேலவன் தலைமையிலான மாணவா்கள் செய்திருந்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு ச... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே, ம... மேலும் பார்க்க

ஸ்ரீ மஞ்சியம்மன் கோயிலில் வழிபட தடை விதித்த தனி நபா்கள்

ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் திடீரென வழிபட தனிநபா்கள் தடை விதித்ததால், 100 அடி தொலைவில் அம்மனை வைத்து கூழ்ஊற்றி திருவிழாவை பொதுமக்கள் நடத்தினா். கொங்கராம்பட்டு கிராமத்தில் உள... மேலும் பார்க்க

மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 16 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா். தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் கா்நாடக மாநிலம், மைசூரில் ஏப்.21 தொடங்கி 23 வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை 2025-2026ஆம் ஆண்டுக்கான வழக்குரைஞா்கள் சங்கத் தோ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி... மேலும் பார்க்க