செய்திகள் :

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

post image

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடக் கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கையை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, ஆதாரங்களுக்கு கூடுதல் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபியுங்கள் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி கோக்னே, இதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கும் முன்பு, நீதிமன்றம் முழுமையாக நம்ப வேண்டும். முழுமையான திருப்தி அடையாமல், இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா்.

இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

மேலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது.

இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிர... மேலும் பார்க்க

அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய 191 பாகிஸ்தானியர்கள்

பஞ்சாபின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

சிக்கிமின் லாச்செங் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட... மேலும் பார்க்க

குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத... மேலும் பார்க்க

பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம ... மேலும் பார்க்க

தில்லி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு!

தில்லி மேயராக பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தில்லியில் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்ததால் பாஜக, காங்கிரஸ் ... மேலும் பார்க்க