செய்திகள் :

``காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' - மெகபூபா முஃப்தி

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் இந்தத் தாக்குதலை மதத்துடன் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுத்தொடர்பாக,  ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி பேசியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளை மீட்டதுடன், மருத்துவமனையில் அவர்களுக்கு தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான்.

அதன்பிறகுதான் சம்பவ இடத்துக்கு ராணுவமும், பாதுகாப்புப்படைகளும், அரசும் உதவ வந்தன. காயமடைந்தவர்களை மைல் கணக்கில் நடந்துச்சென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றியோ, டாக்சி ஓட்டுநர் பற்றியோ, காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆதில்ஷா பற்றியோ பலரும் பேசவில்லை.

காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். இவர்கள் அனைவரும் காஷ்மீரிகள். நாங்கள் (காஷ்மீரிகள்) பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது.

மெகபூபா முஃப்தி
மெகபூபா முஃப்தி

நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!

ஜம்மு பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இந்திய சமூகத்தைப் பிரிப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், இந்த கீழ்த்தரமான செயலை எதிர்த்துப் போராடவும் தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும் நாட்டு மக்கள் ஒற்றுமைய... மேலும் பார்க்க

`பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் புனிதம், அதிமுக வைத்தால் பாவமா?' - ஆர்பி உதயகுமார் சொன்ன பின்னணி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவம் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க திண்ணை பிரசாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்... மேலும் பார்க்க

``துணை வேந்தர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்..'' - ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில், ஊட்டியில் இன்று துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டார்.... மேலும் பார்க்க

Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பல தரப்பில... மேலும் பார்க்க

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியுள்ளது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக். இவர்கள்... மேலும் பார்க்க

``பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கக்கூடாது; ஏனெனில்.." - திருமாவளவன் சொல்வதென்ன?

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்... மேலும் பார்க்க