செய்திகள் :

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

post image

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக். இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா பகுதிகளில் இவர்களின் வீடுகள் உள்ளது.

நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் இருவரின் வீடுகளிலும் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது இருவரின் வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகல்காம் பகுதியில் ராணுவத்தினர்
ஜம்மு காஷ்மீர் பகல்காம் பகுதியில் ராணுவத்தினர்

இதுக்குறித்து அதிகாரிகள் பேசுகையில், "நேற்று பாதுகாப்பு படையினர் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் வீடுகளில் சோதனையிட்டனர். அப்போது அவர்களது வீட்டில் சேகரித்து வைத்திருந்து வெடிப்பொருள்கள் வெடித்து இரு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது" என்று கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கை சேர்ந்த அடில் தோகர் இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

உளவுத்துறையின் தகவலின் படி, அடில் தோகர் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, இவர் தீவிரவாதப் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் குற்றவாளிகளாக தேடப்படும் அடில் தோகர், அலி பாய், ஹசிம் முசா ஆகியோரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்படும் என்று அனந்த்நாக் போலிசார் அறிவித்துள்ளனர்.

``காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' - மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீதுதீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்கு... மேலும் பார்க்க

``துணை வேந்தர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்..'' - ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில், ஊட்டியில் இன்று துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டார்.... மேலும் பார்க்க

Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பல தரப்பில... மேலும் பார்க்க

``பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கக்கூடாது; ஏனெனில்.." - திருமாவளவன் சொல்வதென்ன?

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடிப்பது சூட்டைக் கிளப்புமா?

Doctor Vikatan:தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் முன்கூட்டியே நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் எடுத்துக்கொள்வது எல்லாம் உதவுமா அல்லது கோடையில் இவற்றை எடுத்துக்கொள்வ... மேலும் பார்க்க

Health: அம்மை நோய்; அதிக பாதிப்பு யாருக்கு? அறிகுறி, உணவு, சிகிச்சைகள் என்ன? கம்ப்ளீட் தகவல்கள்!

கோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் பி.செந்தூர் நம்பி.அம்மை ''அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமு... மேலும் பார்க்க