செய்திகள் :

20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

post image

சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார்.

சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால், தூங்கும் இளவரசர் (ஸ்லீபிங் பிரின்ஸ்) என வர்ணிக்கப்படும் இவர் அந்நாட்டை நிறுவிய முன்னாள் அரசர் அப்துல் அஜீஸின், கொள்ளுப்பேரன் ஆவார்.

இவர் கடந்த 2005-ம் ஆண்டு ராணுவக் கல்லூரியில் பயின்று வந்தபோது நிகழ்ந்த வாகன விபத்தினால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோமா நிலைக்குச் சென்ற அவரை அந்நாட்டு தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவ நகரத்திலுள்ள மருத்துவ உபகரணங்கள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் வைத்துள்ளனர்.

இளவரசர் அல்-வாலீதை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் அனைவரும், அந்த உபகரணங்களின் செயல்பாடுகளை நிறுத்தி அவரை மரணமடைய செய்ய பரிந்துரைத்தபோதும், அவரது தந்தையான இளவரசர் காலெத் பின் தலால் அல் சௌத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

‘தனது மகன் மரணிக்க வேண்டுமென கடவுள் நினைத்திருந்தால், அவர் விபத்திலேயே இறந்திருப்பார்’ எனக் கூறும் அவர் ஒரு நாள் நிச்சயம் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரை கவனித்து வருகிறார்.

முன்னதாக, கடந்த ஏப்.18 ஆம் தேதி அன்று இளவரசர் அல்-வாலீத் தனது 36 வது பிறந்த நாளை கோமா நிலையிலேயே அடைந்துள்ளார். அதன் பின்னர், அவரது நிலைக்குறித்தும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019-ல் இளவரசர் அல்-வாலீத்தின் உடலில் சிறியளவிலான அசைவுகள் உண்டானது எனக் கூறப்பட்டது. அவர் தனது கை விரலை உயர்த்தினார் என்றும் தலையை அசைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டாலும் அவர் முழுவதுமாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன்! முதல் வரிசையில்..!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச... மேலும் பார்க்க

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

கரூர்: இரிடியம் தருவதாகக் கூறி கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய மதுரை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் தெற்கு காந்திகிராமத்தை ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.சேந்தமங்கலம் ஜ... மேலும் பார்க்க

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப். 25, 26) நடைபெறுகிற... மேலும் பார்க்க

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.மேட்டூா் அணையில் தற்போது ரூ. 20 கோடி செலவில் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண... மேலும் பார்க்க