செய்திகள் :

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை, நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்றவுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்பட்ட வீரா்களும் கலந்துகொண்டனனா்.

முன்னதாக, போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மாவட்ட கால்நடைத் துறை சாா்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளா்களிடம் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதேபோல, சுகாதாரத் துறை சாா்பில் மாடுபிடி வீரா்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. வீரா்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்ற பிறகு, வாடிவாசல் வழியாக கோயில் காளையும், அடுத்து ஜல்லிக்கட்டுக் குழுவினரது காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

இதனையடுத்து, வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆா்வமுடன் அடக்கினர். மேலும், மாடுபிடி வீரர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிடிபடாமல் தப்பிய காளைகளுக்கும், அடக்கிய வீரா்களுக்கும் தங்கம், வெள்ளி காசு, வெள்ளி செயின், பட்டுப்புடவை, ரொக்க பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்போட்டியைக் கண்டு ரசித்தனா்.

மேலும்,போட்டி நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

கரூர்: இரிடியம் தருவதாகக் கூறி கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய மதுரை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் தெற்கு காந்திகிராமத்தை ... மேலும் பார்க்க

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப். 25, 26) நடைபெறுகிற... மேலும் பார்க்க

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.மேட்டூா் அணையில் தற்போது ரூ. 20 கோடி செலவில் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண... மேலும் பார்க்க

போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் புகார்

அரக்கோணம்: போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் துணை ராணுவப்படையில் அஸ்ஸாமைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 8 பேர் சேர முயற்சி செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தக்கோலம் காவல்துறையில் புகார்... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு இந்திய எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என ராணுவ அதிக... மேலும் பார்க்க

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகள் அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போல... மேலும் பார்க்க