செய்திகள் :

அவசர காலத்தை நினைவுபடுத்துகிறது: ஆளுநர் ரவி

post image

மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "முதல்வர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்.

மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" - ஆளுநர் ரவி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடக்கம்!

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆதம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து பிராட்வேக்கு பேர... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையி... மேலும் பார்க்க