செய்திகள் :

Arjun Tendulkar: ``இதைச் செய்தால் அடுத்த கெயில் அர்ஜுன் டெண்டுல்கர்தான்'' - யுவராஜ் தந்தை சவால்

post image

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருந்தாலும், கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக தனக்கென தனி இடம்பிடிக்கப் போராடிவருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

ஐ.பி.எல்லில் 2023-ல் முதல்முறையாக மும்பை அணியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், அந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். 2024 ஐ.பி.எல் சீசனில் ஒரேயொரு போட்டியில் களமிறங்கிய இவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

சச்சின் டெண்டுல்கர் - அர்ஜுன் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் - அர்ஜுன் டெண்டுல்கர்

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணியிலிருந்து கழற்றவிடப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் மும்பை அணி உள்பட எந்த அணியும் முதலில் வாங்க முன்வரவில்லை. இரண்டாவது முறையாகப் பெயர் வாசித்தபோது, அடிப்படை விலை ரூ.30 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது. இருப்பினும், இந்த சீசனில் இதுவரையில் ஒரு போட்டியில் கூட அர்ஜுன் டெண்டுல்கர் களமிறக்கப்படவில்லை.

அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கிடம் பயிற்சிபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர், ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காகக் களமிறங்கி இதுவரையில் மொத்தமாக 17 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ஒரு சதம் உட்பட 532 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்த நிலையில், தனது மகன் யுவராஜிடம் 3 மாதங்கள் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி பெற்றால் அடுத்த கிறிஸ் கெயிலாக அவர் உருவெடுப்பார் என்று யோகராஜ் சிங் கூறியிருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் - யோகராஜ் சிங்
அர்ஜுன் டெண்டுல்கர் - யோகராஜ் சிங்

cricketnext-டிடம் பேசிய யோகராஜ் சிங், "அர்ஜுன் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, அவர் பந்துவீச்சில் குறைவாகவும், பேட்டிங்கில் அதிகமாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கூறினேன். நான் சவால் விடுகிறேன், 3 மாதங்கள் யுவராஜிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றால் அடுத்த கிறிஸ் கெயிலாக அவர் உருவெடுப்பார். ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அதன் பிறகு திறம்பட பந்துவீச முடியாது. எனவே, அர்ஜுனை யுவராஜிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Fleming: இளம் வீரர்களுக்கு எதிராக தவறான தகவல்; தவறான அணுகுமுறை.. முரண்பாடாக பேசும் ப்ளெம்மிங்!

'இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!'சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வ... மேலும் பார்க்க

`புகழ் உச்சம் பெற்று திடீரென காணாமல் போவார்கள், அதனால்..' - சூர்யவன்ஷி குறித்து சேவாக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் ... மேலும் பார்க்க

Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்கர் கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டும் நேபாள நாட்டைச் சே... மேலும் பார்க்க

CSK vs SRH: `ஒன்றிரண்டு பேரை தவிர யார் ரன் அடித்திருக்கிறார்கள்?' - இளம் வீரர்கள் பற்றி ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

CSK vs SRH: `எங்களோட இன்ஸ்பிரேஷன் RCB தான்!' - ப்ளே ஆப்ஸ் வாய்ப்புப் பற்றி ஸ்டீபன் ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

Pahalgam Attack: `எங்கள் அரசு செய்வதை நாங்கள் செய்வோம்’ - BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் ... மேலும் பார்க்க