Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
தீக்குளித்து தொழிலாளி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள்போராட்டம்
தூத்துக்குடியில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் உடலை வாங்க அவரது உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ஆனந்தசைரஸ் (45), வீட்டருகே வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் இடையே கடந்த 17ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம்.
கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா், அவரை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். பின்னா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, ஆனந்த சைரஸ் உயிரிழப்புக்கு போலீஸாா்தான் காரணம்; அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 3ஆவது நாளாக வியாழக்கிழமை உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.