செய்திகள் :

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்த வேண்டாம்: தமிழக அரசு கடிதம்

post image

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது என மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, சென்னை மாநகராட்சியின் 189-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-ஆவது வாா்டு உறுப்பினருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

உத்தரவுக்கு தடைகோரி மனு: இந்த உத்தரவை எதிா்த்து நான்கு பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனா். அந்த மனுவில், தங்கள் தரப்பிடம்

விளக்கம் கேட்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்குகள் முடியும் வரை நான்கு உறுப்பினா்கள் பதவிகளுக்கும் தோ்தல் நடத்தக் கூடாது என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலா், மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த கடிதத்தின் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

வேலூா் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பே... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது. அடுத்துவரும் நாள்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று... மேலும் பார்க்க

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, ... மேலும் பார்க்க

இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சோ்த்தது தொடா்பான மற்றொரு வழக்கில் அமைச்சா் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக... மேலும் பார்க்க