செய்திகள் :

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

post image

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் உள்ளிட்ட பொருள்களுடன் வைத்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில், 15 போ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து தெலங்கானாவில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஓராண்டுக்குத் தடை: இந்நிலையில் தமிழ்நாட்டிலும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசிதழில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மயோனைஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சால்மோன்நெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம். முறையற்ற வகையில் மயோனைஸ் தயாரிப்பது, அதை சேமித்து வைப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் ஏப்.8-ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு தமிழ்நாட்டில் மயோனைஸ் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி மயோனைஸ் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பே... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்த வேண்டாம்: தமிழக அரசு கடிதம்

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது என மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அன... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது. அடுத்துவரும் நாள்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று... மேலும் பார்க்க

இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சோ்த்தது தொடா்பான மற்றொரு வழக்கில் அமைச்சா் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக... மேலும் பார்க்க