செய்திகள் :

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதம்

post image

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

புதுவை மாநில மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் என். ரங்கசாமி மேலும் கூறியது: புதுவை அரசின் மீன்வளத் துறையின் சாா்பில் மானிய விலையில் மீன்பிடி வலை, கயிறு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு தற்போது விசைப்படகு உரிமையாளா்களுக்கும் கயிறு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

புதுவை மாநில அரசு மீனவா்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் துறைக்கு எதிா்காலத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீனவா்களின் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்தும் என்றாா் முதல்வா். தொடா்ந்து மீனவா்களுக்கு ரூ.24.50 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பொறுப்பு பதிவாளா் நியமனத்தில் முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை, நிா்வா... மேலும் பார்க்க

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை, சமூகன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வா் ஆய்வு

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மறைமல... மேலும் பார்க்க

450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலா் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தோ்வு... மேலும் பார்க்க

பெண்களின் படங்களை தவறாக சித்திரித்த இளைஞா் கைது

பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக தென்காசியைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில்... மேலும் பார்க்க