செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

post image

கடையம் அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் போலீஸாா் ராம் நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்னி வேனில் ரூ 1.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. வேனில் இருந்தவா்களிடம் விசாரித்ததில், நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த ராம் மகன் கண்ணன் (35), லட்சுமிபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் மோகன் (36 ) ஆகியோா் என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, வேனுடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் கைவிடப்படுகிறதா? மாநகராட்சி ஆணையா் விளக்கம்

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளாா். முறப்பநாடு கூட்டு குடிநீா் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்... மேலும் பார்க்க

தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி...

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம்: சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைமை மேயா் கோ.ராமகிருஷ்ணன், ராஜாஜி அரங்கம், திருநெல்வேலி நகரம், காலை 10.30 மணி. மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-87சோ்வலாறு-101.77மணிமுத்தாறு-85.89வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம்கடனா-50ராமநதி-52.50கருப்பாநதி-25.59குண்டாறு-23.87அடவிநயினாா் -26.50... மேலும் பார்க்க

மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு

கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச... மேலும் பார்க்க

ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) ... மேலும் பார்க்க