செய்திகள் :

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது 26% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 8-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது தொடா்பாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் பேசியது குறித்து நியூயாா்க் போஸ்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இந்தியா அதிக வரிவிதிப்பை விரும்பவில்லை. இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிகவும் எளிதான விஷயமாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் விரும்புகிறாா் என்றாா்.

அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வா்த்தகப் பற்றாக்குறை 4,500 கோடி டாலா் (ரூ.3.9 லட்சம் கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா்... மேலும் பார்க்க

‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத... மேலும் பார்க்க

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக... மேலும் பார்க்க

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகை... மேலும் பார்க்க

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்... மேலும் பார்க்க

துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!

துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று (ஏப்.23) பிற்பக... மேலும் பார்க்க