போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!
சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் 10,000 பாதுகாப்பு படையினா் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
அவா்கள் நக்ஸல் தீவிரவாதிகளின் முக்கிய கூட்டமைப்பை சோ்ந்தவா்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை-வனப்பகுதிகளில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி), சத்தீஸ்கா் மாநில காவல் துறை மற்றும் தெலங்கானா காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படையினருடன் இணைந்து வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்த சண்டையில் மேலும் சில நக்ஸல்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை மேலும் சில நாட்கள் தொடரவுள்ளது’ என்றாா்.
இந்த மூவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 144-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 127 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.