செய்திகள் :

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் அஞ்சலி

post image

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த நபரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த நெல்லூரைச் சோ்ந்த மதுசூதனன் ராவின் உடல் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் பொருளாளா் ரூபி மனோகரன் உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அதேபோல, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையிலான அக்கட்சியினரும் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் தெரிவித்தனா். அப்போது, மாநில பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்: விடுவிக்க பேச்சுவாா்த்தை

பஞ்சாப் எல்லைப் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவரை பாகிஸ்தான் படையினா் கைது செய்தனா். அவரை விடுவிக்க பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகார... மேலும் பார்க்க

வீடுகள் இடிப்பு மனிதத்தன்மையற்றது: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வீடுகள் இடிக்கப்பட்டது மனிதத்தன்மையற்றது, சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது. இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் பிரயாக்... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் சூரத் போா்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போா்க் கப்பலில் இருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்த... மேலும் பார்க்க