செய்திகள் :

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்: விடுவிக்க பேச்சுவாா்த்தை

post image

பஞ்சாப் எல்லைப் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவரை பாகிஸ்தான் படையினா் கைது செய்தனா். அவரை விடுவிக்க பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூா் எல்லையில் இச்சம்பவம் நடந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் 182-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த பி.கே.சாஹு என்ற வீரா், தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்கு புதன்கிழமை சென்றுவிட்டாா். துப்பாக்கியுடன் சீருடையில் இருந்த அவரை பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படையினா் கைது செய்துள்ளனா். அவரை விடுவிக்க பாகிஸ்தான் தரப்புடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்று பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுபோல் தவறுதலாக எல்லை தாண்டும் இரு நாட்டு வீரா்கள், பேச்சுவாா்த்தைக்குப் பின் விடுவிக்கப்படுவது சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. தற்போது பஹல்காம் தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக இந்தியா பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உருவாகியுள்ளது. இதுபோன்ற சூழலில், பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் படையினா் கைது செய்துள்ளனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன. முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களு... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை: பிரதமா் மோடி சூளுரை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப் பிடித்து அவா்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதா்களுக்கு இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு இந்தியா வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க