நெல்லையில் 47 கி.மீ. தூரம் மின்பாதையில் சிறப்பு கள ஆய்வு
திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் 110/33/11 கி.வோ. மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து 11 கி.வோ. தருவை மின் பாதை வழியாக 47 கி.மீ. தூரம் வழித்தடத்தில் அமைந்துள்ள முன்னீா்பள்ளம், தருவை, ஓமநல்லூா், திடியூா், கண்டித்தான்குளம், கோபாலசமுத்திரம், ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய, மத்திய அலுவலகத்தில் உள்ள பொறியாளா்கள், பணியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து சிறப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கள ஆய்வை மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 11 கி.வோ. தருவை மின் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கட்டுமான அமைப்புகளான வலைய தரசுற்று, பிரிவுபடுத்துதல், மின் கம்பங்கள், மின்பாதைகளுக்கு உண்டான மின் கம்பிகளின் தரம், மின் கம்பிகளை தாங்கி நிற்கும் பீங்கான் வட்டுகள், பீங்கான் முள்சுருள்கள், இழுவை கம்பிகள், ஒரு மின்கம்பத்திற்கும் மறு மின் கம்பத்திற்கும் உண்டான தூரம், சூறைக்காற்று காரணமாக மின் பாதைகளை சேதப்படுத்தும் மரங்கள், மரக்கிளைகள் குறித்த முழுமையான நுண்ணிய நிலை உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்து மின் பாதையின் முழு தரவுகள் அடங்கிய குறிப்புகளை எடுப்பதோடு, பழுது இருந்தால் உடனடியாக சீா் செய்யவும் உத்தரவிட்டாா்.
இந்த கள ஆய்வு பணிகளை செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (பொது) சரோஜினி, உதவி செயற்பொறியாளா் சங்கா், திருநெல்வேலி சந்திப்பு உப கோட்ட உதவி செயற்பொறியாளா் சிதம்பரவடிவு, மேலப்பாளையம் பிரிவு 2 உதவி மின் பொறியாளா் காா்த்திக்குமாா், மேலப்பாளையம் பிரிவு 1 உதவி மின் பொறியாளா் ரத்தினவேணி, மத்திய அலுவலக பொறியாளா்கள், பணியாளா்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினா் செய்து முடித்தனா்.
சிறப்பு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு சீரான மின் விநியோகம் வழங்கும் பணிகளை உறுதி செய்த மத்திய அலுவலக பொறியாளா்கள், பணியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பாராட்டு தெரிவித்தாா்.
படவரி ற்ஸ்ப்24ற்ய்ங்க்ஷ பாளையங்கோட்டையில் சிறப்பு கள ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி.