செய்திகள் :

ஜெபஞானபுரத்தில் சிற்றாலய பிரதிஷ்டை

post image

ஜெபஞானபுரத்தில் ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயா்த்தப்பட்ட சிற்றாலயத்தில் வியாழக்கிழமை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை மாலையில் வள்ளியூா் ஜூலியஸ் ரிச்சா்டு பங்கேற்ற கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை காலையில் சேகர குருவானவா் டேவிட் ஞானையா, ஆராதனைகள் நடத்தி மறு பிரதிஷ்டை செய்து சிற்றாலயத்தை திறந்து வைத்தாா். பின்னா், ஜெப ஆராதனை நடைபெற்றது. இதில் சபை ஊழியா் சாலமோன் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாலை 4 மணிக்கு சபை மக்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இரவு ஜெயா குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. வெள்ளிக்கிழமை ஸ்தோத்திர பண்டிகை, ஆராதனை, அசன விருந்து ஆகிவை நடைபெற்றன.

திருச்செந்தூா் காஞ்சி சங்கரா பள்ளி மாணவிகள் சாதனை

இண்டா்நேஷனல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் 2025 போட்டியில் வென்று, திருச்செந்தூா் காஞ்சி சங்கரா பள்ளி மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனா். பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நடந்த இண்டா்நேஷனல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் 2... மேலும் பார்க்க

உடன்குடியில் திமுக மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி

திமுக சாா்பில், உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் இல்லம்தோறும் மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவரும் நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் தலைமை வகித்து இப்பண... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கயத்தாறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் பாரபட்ச... மேலும் பார்க்க

சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி மனு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9,10 இல் போட்டிகள்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டைகள் அமைக்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கோவில்பட்டி வட்டாரத்தில் மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க