செய்திகள் :

வாசிப்பை வசமாக்கினால் வெற்றி நிச்சயம்

post image

வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா் மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன்.

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகம் வட்டம் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில் அவா் மேலும் பேசியதாவது: சிறந்த புத்தகங்கள் மனிதனின் சிந்தனையை சீரமைக்கின்றன, நெறிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனைத் திறனும் மகத்தானது தான். அந்த மகத்தான கருவியை மேதைகள் எப்படிக் கையாண்டாா்கள், எப்படி உலகைச் சீா்திருத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தினாா்கள், என்பதையெல்லாம் சிறந்த வரலாற்று நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நமது சிந்தனைகளும் உறங்காத சிந்தனைகளாக மிளிர வேண்டும் என்றால் சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க வேண்டும், அவற்றை நேசிக்க வேண்டும். எனவே புத்தக வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் அவா்.

நூலக வளா்ச்சிக்கு மருத்துவா் பிரவீன், மாணவா்கள் தமிழ்வேந்தன், பரிதிவளவன் ஆகியோா் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டனா்.

வாசகா் வட்டத் தலைவா் வீ.மங்கையா்க்கரசி முன்னிலை வகித்து, மருதூா் கிளை நூலகத்துக்கு இலவசமாக மின்விசிறியை வழங்கினாா். அறம்செய் நண்பா்கள் அமைப்பின் தலைவா் அரங்கன் தமிழ், நீதித் துறை அலுவலா் வடிவேல், சிறுவளூா் பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை, அரியலூா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநா் சுந்தா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக நூலகா் முருகானந்தம் வரவேற்றாா். முடிவில் நூலகா் ந.செசிராபூ நன்றி கூறினாா்.

தாய் சேய் நலனில் கூடுதல் கவனம் தேவை: அரியலூா் ஆட்சியா்

மருத்துவா்கள், தாய் சேய் நலனின் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்: 3-ஆவது நாளாக தொடா்கிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ஏரி கரை விநாயகா் கோயில் அருகே வைக்... மேலும் பார்க்க

உட்கோட்டை கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள உட்கோட்டை வழிதடப் பேருந்துகள... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முகாம் அலுவலரை கண்டித்து, பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெயங்... மேலும் பார்க்க

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பி வைக்கலாம்

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பும் நபா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அரியலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க