சிம்மம் | Guru Peyarchi | Simmam - ஜன்ம கேதுவின் தொல்லையைத் தீர்ப்பாரா குரு? குர...
கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பி வைக்கலாம்
கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பும் நபா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அரியலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு (2025- ஆம் ஆண்டு) சா்வதேச கூட்டுறவு ஆண்டாக உலக அளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்களை அரியலூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் அனுப்பலாம்.
பாடல் இசையமைக்கப்பட்டு 5 நிமிஷங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்கவேண்டும். கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக தமிழில் இருக்கவேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாராமல் பாடல்கள் இருக்கவேண்டும்.
கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு குறித்த எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்கவேண்டும். அனுப்பப்படும் பாடல் பதிவை அஞ்சல் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் பாடலின் ஒலி வடிவத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ண்ய்ஸ்ரீன்ா்ள்ஃஞ்ம்ஹண்ப்ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
அனுப்பப்படும் பாடல்களை ஏற்றுக்கொள்ள மற்றும் நிராகரிக்க தோ்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.