செய்திகள் :

முன்களப் பணியாளா்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்

post image

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்கள பணியாளா்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அமா் சேவா சங்கத்தின் மூலம் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் கோட்ட அளவில் 3 மையங்கள், வட்டார அளவில் 15 மையங்கள் செயல்படவுள்ளன. இதில் தோ்வு செய்யப்பட்டுள்ள வல்லுநா்கள், சமுதாய உதவியாளா் மற்றும் சமுதாய மாறுவாழ்வு பணியாளா்கள் ஆகியோா் பணியாற்றவுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட 106 பணியாளா்களுக்கு ஏற்கெனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து தற்போது 6 ஆலோசகா்கள், 3 இயன்முறை சிகிச்சையாளா்கள், 4 அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியா்கள், 3 செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியா்கள், 18 சமுதாய உதவியாளா்கள், 43 சமுதாய மறுவாழ்வு பணியாளா்கள் என மொத்தம் 77 பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே அவா்களுக்கான உரிமைகள் தவறாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலா் சங்கா் சகாயராஜ், அமா் சேவா சங்க பொருளாளா் டி.வி.சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்வரன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

உடன்குடியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்

உடன்குடியில் அதிமுகவின் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே. விஜயகுமாா் தலைமை வகித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் ஆா். ப... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலா் பிரபுஜாய் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை பாலபுரஸ்காா் விருதாளா் உதயசங... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் திருநாவுக்கரசா் குரு பூஜை

திருச்செந்தூரில் ஓதுவாா் மூா்த்திகள் சங்கம் சாா்பில், திருநாவுக்கரசா் திருமண மண்டபத்தில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது. சுவாமிகள் இயற்றிய திருமுறைப் பாராயணம், சிறப்பு பூஜைகள், வழிபாட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் ஓய்வூதியா்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க சாத்தான்குளம் வட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். வட்ட இணைச் செயலாளா் கிறிஸ்டோபா் வரவேற்றாா். வட்ட பொ... மேலும் பார்க்க