செய்திகள் :

பஹல்காம்: அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்?

post image

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக, பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கி வந்த பஹ்லகாம், தற்போது அச்சுறுத்தப்படும் பகுதியாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 4,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த நபரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீா்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் முடிவு: நிபுணா்கள் கருத்து

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும்’ என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து அணைகள், ஆறுகள் மற்றும் மக்க... மேலும் பார்க்க

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு

‘பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நில... மேலும் பார்க்க