ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவுரையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராணுவ தரப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிரமான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, அமெரிக்கா்கள் ஜம்மு- காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அதேபோல மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் மட்டுமே அமெரிக்கா்கள் பயணிக்க வேண்டும். ஏனெனில் அங்கும் மோதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.