செய்திகள் :

``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றி பாகிஸ்தான்!

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை 'தண்ணீர் போர்' என்றும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது பாகிஸ்தான்.

இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலுக்குபதிலாக பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

1971 விடுதலைப் போருக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தம், எதிர்கால மோதல்களை நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"போர் நடவடிக்கை"

பாகிஸ்தான், "சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒரு தலைபட்சமாக நிறுத்த முடியாது. இது உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகள் சம்பந்தப்பட்டது. இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக சவால் செய்வோம்" எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலக அறிக்கையில் சிந்து நதியின் தண்ணீர் அந்த நாட்டின் 24 கோடி மக்களுக்கு உயிர்நாடியாக இருப்பதாகவும், அதில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Sindhu River
Sindhu River

"பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீர் ஓட்டத்தை நிறுத்தவோ, திசைமாற்றவோ செய்யப்படும் நடவடிக்கையும், ஆற்றின் கீழ் பகுதியில் வாழும் மக்களின் உரிமையை அபகரிப்பதும் போர் நடவடிக்கையாக கருதப்படும். இதற்கு முழு பலத்துடன் பதிலளிக்கப்படும்." என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிலுக்கு பதில் நடவடிக்கைகள்

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அரசு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றவும், வாகா-அட்டாரி நில எல்லையை மூடவும், விசாக்களை (SVES) ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல பாகிஸ்தானும் இந்தியர்கள் வெளியேற வேண்டுமென அறிவித்துள்ளது.

India vs Pakistan
India vs Pakistan

1960 ஆம் ஆண்டு உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியிலிருந்து 80% நீர் ஓட்டத்தை இந்தியா பாகிஸ்தானுக்கு மேல் நதிக்கரை நாடாக வழங்குகிறது. ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது என்ற முடிவு பாகிஸ்தானின் விவசாயத் துறையைப் பாதிக்கும்.

பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என உறுதியாக கூறியுள்ளார். "இந்தியாவிடம் எதாவது ஆதாரம் இருந்தால் அதை உலக அரங்கில் வைக்கச் சொல்லுங்கள்" எனப் பேசியுள்ளார்.

இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிப்போம் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் (Pakistan Defense Minister Khawaja Asif)
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் (Pakistan Defense Minister Khawaja Asif)

"இது ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. இந்தியா தனது சொந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் மீது பழிபோட முயற்சிக்கிறது." என அவர் கூறியுள்ளார். மேலும் "தற்காப்புக்காகவே தயார்நிலையில் இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "இந்தியா நீண்டகாலமாக சிந்து நீர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முயற்சித்து வருகிறது. உலக வங்கியும் இதில் தலையிட்டிருப்பதால், அவர்களால் தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்க முடியாது." என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Pahalgam Attack: ``ராணுவத்துக்கு எதுவும் தெரியாமல் இருந்ததா?'' - உயிரிழந்தவரின் மனைவி கேள்வி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குஜராத்தியர்களில் ஒருவரான ஷைலேஷ் ஹிம்மத்பாய் கல்தியா, அடக்க நிகழ்வில் குடும்பத்தினரின் துக்கம் கோபமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்துடன் காஷ... மேலும் பார்க்க

சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய BSF அதிகாரி; சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அதேச... மேலும் பார்க்க

``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், பிரதமர் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லாமல் தேர்தல் பரப்புரைக்கு சென்றதாக விமர்சித்துள்ளார். "அமித் ஷா பதவி விலக வேண்டும்... அரசியலுக்கா... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வைரல் வீடியோ.. Jumping Jacks பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ காட்சியை சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். ஜம்ப்ப... மேலும் பார்க்க

Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி பராமரிக்கணும்?

மனிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா' என்று அசட்டையாக விட்ட... மேலும் பார்க்க