செய்திகள் :

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

post image

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு வாகா எல்லை மூடல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது இந்திய அரசு.

இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை இந்தியாவில் முடக்கி உள்ளது இந்திய அரசு. அதனால், இனி யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை பார்க்க முடியாது.

இந்தியா முடக்கிய பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு
இந்தியா முடக்கிய பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று வலுவாக இந்தியா சந்தேகிக்கிறது. இதையடுத்து தான் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது.

ஆனால், 'எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உலக அரங்கிலும் பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்தினால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: வைரல் வீடியோ.. Jumping Jacks பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ காட்சியை சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். ஜம்ப்ப... மேலும் பார்க்க

Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி பராமரிக்கணும்?

மனிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா' என்று அசட்டையாக விட்ட... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரை விட்டு அவசரமாக வெளியேறும் சுற்றுலா பயணிகள்; உதவும் உமர் அப்துல்லா

பகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பின், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் வேக வேகமாக சொந்த மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சில போ... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' - பாகிஸ்தான் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் (Pahalgam Attack) நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் இந்த வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாக... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான ... மேலும் பார்க்க