செய்திகள் :

மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

post image

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ரூ. 3.92 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அந்த வழக்கில் துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது எனவும் துரைமுருகனை விடுவித்தது ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு வழக்கிலும் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் 2007-09 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2011-ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2017-ல் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் வேலூர் நீதிமன்றம் இந்த வழக்கினை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் எப்போது?

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வ... மேலும் பார்க்க

4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வர... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: கல்லூரிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!

சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று(ஏப். 24) ஒரு சில முக்கிய ப... மேலும் பார்க்க

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்... மேலும் பார்க்க