செய்திகள் :

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையினால் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமானது பஸ்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியளவிலான நடவடிக்கை எனவும் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மாநில காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையில் தெலங்கானா காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் சக்தி வாய்ந்த ராணுவமாகக் கருதப்படும் பட்டாலியன் 1-ஐ சேர்ந்த மூத்த நக்சல்கள் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்கள் ஆகியோரின் நடமாட்டமுள்ளதாகக் தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த ஏப்.21 ஆம் தேதி முதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் இயங்கி வந்த 2 போலி கால் சென்டரைக் கண்டுபிடித்து 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கொல்கத்தாவின் செலிம்பூரில் ஒரு கால் சென்டர் மற்றும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: 3 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் குஜராத் வந்தடைந்தன

அகமதாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் குஜராத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ... மேலும் பார்க்க

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு

சென்னை: பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் எ... மேலும் பார்க்க