செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: 3 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் குஜராத் வந்தடைந்தன

post image

அகமதாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் குஜராத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் கலாதியா, பாவ்நகரைச் சேர்ந்த யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித் ஆகியோர் அடங்குவர்.

மும்பையில் இருந்து ஒரு விமானத்தில் யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித்தின் உடல்கள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்திலிருந்து, பர்மர் மற்றும் அவரது மகனின் உடல்கள் ஒரு ஆம்பூலன்ஸ் மூலம் பாவ்நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெறும் யதீஷ் மற்றும் ஸ்மித் பர்மரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பூபேந்திர படேல் பாவ்நகர் சென்றுள்ளார்.

இதர சுற்றுலாப் பயணிகள் அதே விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர்கள் மும்பையிலிருந்து சொகுசு பேருந்தில் பாவ்நகருக்கு அழைத்து வரப்படுவதாக பாவ்நகர் ஆட்சியர் மணீஷ் குமார் பன்சால் கூறினார்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

மேலும், புதன்கிழமை இரவு மற்றொரு விமானத்தில் கலாதியாவின் உடல் சூரத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் இருந்து தப்பிய கலாதியாவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே விமானத்தில் சூரத் வந்தடைந்தனர்.

சூரத் விமான நிலையத்தில், கலாதியாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் இயங்கி வந்த 2 போலி கால் சென்டரைக் கண்டுபிடித்து 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கொல்கத்தாவின் செலிம்பூரில் ஒரு கால் சென்டர் மற்றும் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக... மேலும் பார்க்க

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ... மேலும் பார்க்க

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு

சென்னை: பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் எ... மேலும் பார்க்க

பெஹல்காம் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹல்காமில் சுற்று... மேலும் பார்க்க