செய்திகள் :

J&K Attack: `பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள்’ - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட 2.5 மணி நேர பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.

நிஷிகாந்த் துபே
நிஷிகாந்த் துபே பதிவு

இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தின் நாயகன் நேரு ஜி, 1960 இல் நோபல் பரிசு பெறுவதற்காக, சிந்து, ரவி, பியாஸ், செனாப், சட்லஜ் ஆகியவற்றின் தண்ணீரைக் கொடுத்து இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்தினார்.

இன்று, மோடி ஜி உணவு மற்றும் தண்ணீரை நிறுத்தியுள்ளார். பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள். இது 56 அங்குல மார்பு. ஹூக்கா, தண்ணீர், உணவு மற்றும் தண்ணீர் நிறுத்தப்படும். நாங்கள் பாஜக ஊழியர்கள். அவர்களை சித்திரவதை செய்த பிறகு நாங்கள் அவர்களைக் கொல்வோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க

`சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்’ - மீண்டும் முட்டி மோதி கொண்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி

'மீண்டும் மீண்டுமா?' என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் ... மேலும் பார்க்க

`ராஜ்ய சபா சீட்: வாய்த்துடுக்கு மன்னரா, மாஜி காக்கியா? டு வேதனையில் சூரியக் கட்சியினர்’ | கழுகார்

ஆறு மாதங்கள் பணி நீட்டிப்பு?ஆளும் தரப்போடு நெருக்கம்...தமிழக காவல்துறையின் உச்சப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் பதவிக்காலம், விரைவிலேயே முடியப்போகிறது. அந்த அதிகாரியின் பிறந்த தேதி அடிப்படையில்... மேலும் பார்க்க

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

இன்றைய (23 04 2025) இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,•⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி•⁠ ⁠”அவன் சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்•⁠ ⁠தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரத... மேலும் பார்க்க

Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி பாதிக்கும்? Explained

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத... மேலும் பார்க்க