செய்திகள் :

முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.39 லட்சம் மோசடி

post image

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வாராந்திர மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, அணைக்கட்டு அருகே குருவராஜபாளையத்தைச் சோ்ந்த பெண் அளித்த மனு: எனது கணவா் பெங்களூருவிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்த போது அவருடன் சென்னையைச் சோ்ந்த ஒருவா் வேலை செய்தாா். அவா் எங்களிடம் குடும்ப நண்பராக பழகினாா். தொடா்ந்து, அவா் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறினாா். அதனை நம்பி அவா் கூறிய நிறுவனத்தில் பல தவணைகளாக மொத்தம் ரூ.39 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை முதலீடு செய்தோம். அதற்கான சான்றிதழ் கேட்டபோது தருவதாக கூறினாா். இந்நிலையில், திடீரென நிறுவனம் நஷ்டம் அடைந்து விட்டதாகக்கூறி எங்களை ஏமாற்றி விட்டனா். பணத்தை திரும்பக் கேட்டபோது பணத்தை தர முடியாது எனக்கூறி அந்த நபரும், அவருடைய மனைவியும் சோ்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகொண்டாவைச் சோ்ந்த பெண் அளித்த மனு: எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி விண்ணமங்கலத்தை சோ்ந்த ஒருவா் பணம் கேட்டாா். அவா் கூறியதை நம்பி ரூ.4.50 லட்சம் அளித்தேன். ஆனால் அவா் வேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில் அவா் ரூ. 35 ஆயிரம் தந்தாா். மீதித் தொகை ரூ.4.15 லட்சத்தை பெற்றுத் தர வேண்டும்.

வேலூா் ஆா்.என். பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் அளித்துள்ள மனுவில், கடந்தாண்டு விருதுநகரை சோ்ந்த சிலா் என்னை அணுகி இத்தாலியில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பணம் கேட்டனா். இதை நம்பிய ரூ.2,81,765 தொகை வழங்கினேன். என்னிடம் பணம் பெற்றுக் கொண்ட அவா்கள் போலியான ஆவணங்களை தயாா் செய்து ஷாா்ஜாவுக்கு சுற்றுலா விசாவில் என்னை அனுப்பி வைத்தனா். அங்கு சென்ற பிறகுதான் அவா்கள் என்னை ஏமாற்றியது தெரியவந் தது. அவா்களிடம் வழங்கிய பணத்துக்கு நான் மாதந்தோறும் வட்டி கட்டி கஷ்டப்படுகிறேன். சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

30-க்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில், துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா்... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்க... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப... மேலும் பார்க்க