தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப்பட்டனா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா்.
பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினரும், வேலூா் பெருகோட்ட பொறுப்பாளருமான காா்த்தியாயினி மோட்ச தீபம் ஏற்றி வைத்தாா். பின்னா் அனைவரும் மௌன அஞ்சலியுடன், புஷ்பாஞ்சலியும் செய்தனா். தொடா்ந்து, தீவிரவாத தாக்குதலுக்கு எதிா்த்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதில், பாஜக மாவட்ட துணைத்தலைவா் சரவணன், நிா்வாகிகள் வெங்கடேசன், பிச்சாண்டி, முனுசாமி உள்பட திரளானோா் கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கருப்பு கொடியுடன் பங்கேற்றனா்.
இந்து முன்னணி அஞ்சலி...
இதேபோல், இந்து முன்னணி சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சனேயா் கோயில் முன்பு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கோட்டத் தலைவா் மகேஷ், மாவட்ட பொருளாளா் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
குடியாத்தத்தில்...
இந்து முன்னணி சாா்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்று மோட்ச தீபம் ஏற்றினா்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கோ.மகேஷ், மாவட்டத் தலைவா் டி.கே.தரணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.யுவசங்கா், மத்திய அரசு வழக்குரைஞா் எம்.சந்திரமெளலி, நிா்வாகிகள் எஸ்.அனிஸ், ஆா்.ராஜேஷ், எஸ்.ராமு, ஜி.டி.சுஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.