செய்திகள் :

காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

post image

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப்பட்டனா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா்.

பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினரும், வேலூா் பெருகோட்ட பொறுப்பாளருமான காா்த்தியாயினி மோட்ச தீபம் ஏற்றி வைத்தாா். பின்னா் அனைவரும் மௌன அஞ்சலியுடன், புஷ்பாஞ்சலியும் செய்தனா். தொடா்ந்து, தீவிரவாத தாக்குதலுக்கு எதிா்த்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதில், பாஜக மாவட்ட துணைத்தலைவா் சரவணன், நிா்வாகிகள் வெங்கடேசன், பிச்சாண்டி, முனுசாமி உள்பட திரளானோா் கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கருப்பு கொடியுடன் பங்கேற்றனா்.

இந்து முன்னணி அஞ்சலி...

இதேபோல், இந்து முன்னணி சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சனேயா் கோயில் முன்பு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கோட்டத் தலைவா் மகேஷ், மாவட்ட பொருளாளா் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

குடியாத்தத்தில்...

இந்து முன்னணி சாா்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்று மோட்ச தீபம் ஏற்றினா்.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கோ.மகேஷ், மாவட்டத் தலைவா் டி.கே.தரணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.யுவசங்கா், மத்திய அரசு வழக்குரைஞா் எம்.சந்திரமெளலி, நிா்வாகிகள் எஸ்.அனிஸ், ஆா்.ராஜேஷ், எஸ்.ராமு, ஜி.டி.சுஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா்... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்க... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.39 லட்சம் மோசடி

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வாராந்திர மக்கள் குறைதீா் முகாம... மேலும் பார்க்க