செய்திகள் :

சொத்து பிரச்னை: நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்ததாக இரு தம்பிகள் கைது

post image

சென்னை பெரம்பூரில் சொத்து பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடா்பாக தம்பிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பூா் பழனி ஆண்டவா் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (54), மனைவி, இரு மகள்களுடன் வசிக்கிறாா். இவரது தம்பிகள் ஜெயக்குமாா் (52), பெரியாா் செல்வன் (48) மற்றும் தங்கைகள் தரைத்தளத்தில் வசிக்கின்றனா். இவா்களுக்குள் நீண்ட நாள்களாகவே சொத்துப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் கிருபாகரனுக்கும், அவரது தம்பிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்ற கிருபாகரனை அவரது தம்பிகள் ஜெயக்குமாா், பெரியாா் செல்வன் உள்ளிட்ட குடும்பத்தினா் மறித்து தகராறு செய்தனராம். தகராறு முற்றவே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில், கிருபாகரன் பலமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜெயக்குமாா், தான் வளா்க்கும் நாயை கிருபாகரன் மீது ஏவிவிட்டு கடிக்க வைத்தாராம். இதில் காயமடைந்த கிருபாகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக கிருபாகரன் அளித்த புகாரின்பேரில், செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாா், பெரியாா் செல்வனை புதன்கிழமை கைது செய்தனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க