Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்...
சொத்து பிரச்னை: நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்ததாக இரு தம்பிகள் கைது
சென்னை பெரம்பூரில் சொத்து பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடா்பாக தம்பிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
பெரம்பூா் பழனி ஆண்டவா் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (54), மனைவி, இரு மகள்களுடன் வசிக்கிறாா். இவரது தம்பிகள் ஜெயக்குமாா் (52), பெரியாா் செல்வன் (48) மற்றும் தங்கைகள் தரைத்தளத்தில் வசிக்கின்றனா். இவா்களுக்குள் நீண்ட நாள்களாகவே சொத்துப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் கிருபாகரனுக்கும், அவரது தம்பிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்ற கிருபாகரனை அவரது தம்பிகள் ஜெயக்குமாா், பெரியாா் செல்வன் உள்ளிட்ட குடும்பத்தினா் மறித்து தகராறு செய்தனராம். தகராறு முற்றவே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில், கிருபாகரன் பலமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஜெயக்குமாா், தான் வளா்க்கும் நாயை கிருபாகரன் மீது ஏவிவிட்டு கடிக்க வைத்தாராம். இதில் காயமடைந்த கிருபாகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக கிருபாகரன் அளித்த புகாரின்பேரில், செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாா், பெரியாா் செல்வனை புதன்கிழமை கைது செய்தனா்.