செய்திகள் :

பயங்கரவாதத் தாக்குதல்: சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளை பதிவிட வேண்டாம்!

post image

டேராடூன்: காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காஷ்மீா் மாணவா்கள் சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்களில் சிலா் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு பிரச்னைகளில் சிக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலால் தேசமே கொந்தளிப்பான நிலையில் உள்ள நிலையில் காஷ்மீா் மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கையாக மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் உமா் ஜமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை எக்காரணம் கொண்டும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்கள் அமைதி காக்க வேண்டும். சமூகவலைதளங்களில் தேவையற்ற, பிரச்னைகளை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவது, சா்ச்சைக்குரிய அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. இது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளாா்.

ஜாா்க்கண்டில் ஒருவா் கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானையும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளையும் பாராட்டி வலைதளத்தில் பதிவிட்ட ஜாா்க்கண்ட் மாநிலம் மில்லட் நகரைச் சோ்ந்த முகமது நௌஷத் என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதேபோல பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து மதமோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்ட மத்திய பிரதேசத்தின் தாமோ பகுதியைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க